وَبِكُفۡرِهِمۡ وَقَوۡلِهِمۡ عَلَىٰ مَرۡيَمَ بُهۡتَٰنًا عَظِيمٗا
التاميلية | தமிழ்
அவர்கள் நிராகரித்ததனாலும், மர்யம் (அலை) அவர்கள் மீது அபாண்டமாக விபச்சாரக்குற்றச்சாட்டை சுமத்தியதனாலும் நாம் நம் கருணையிலிருந்து அவர்களைத்தூரமாக்கினோம்.
يَـٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لَا تَغۡلُواْ فِي دِينِكُمۡ وَلَا تَقُولُواْ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّۚ إِنَّمَا ٱلۡمَسِيحُ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ رَسُولُٱللَّهِ وَكَلِمَتُهُۥٓ أَلۡقَىٰهَآ إِلَىٰ مَرۡيَمَ وَرُوحٞ مِّنۡهُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۖ وَلَا تَقُولُواْ ثَلَٰثَةٌۚ ٱنتَهُواْ خَيۡرٗا لَّكُمۡۚ إِنَّمَاٱللَّهُ إِلَٰهٞ وَٰحِدٞۖ سُبۡحَٰنَهُۥٓ أَن يَكُونَ لَهُۥ وَلَدٞۘ لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا
التاميلية | தமிழ்
தூதரே! இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களிடம் “உங்களின்மார்க்கத்தில் வரம்புமீறி விடாதீர்கள். ஈஸாவைக் குறித்து உண்மையைத் தவிரஎதனையும் அல்லாஹ்வின் மீது கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈஸா மஸீஹ்உண்மையைக் கொண்டு அல்லாஹ் அனுப்பிய தூதரே. ஜிப்ரீல் மூலம் மர்யமிடம்அனுப்பிய தன் வார்த்தையால் அவரைப் படைத்தான். “குன்” (ஆகிவிடு) என்பது தான்அந்த வார்த்தை. அவர் ஆகிவிட்டார். அல்லாஹ்வின் கட்டளையினால் ஜீப்ரீல் மர்யமிடம்அதை ஊதினார். எனவே அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் அனைவரின்மீதும் பாகுபாடின்றி நம்பிக்கை கொள்ளுங்கள். “கடவுள்கள் மூவர்” என்று கூறாதீர்கள். பொய்யான இந்த விஷயத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்குஇவ்வுலகிலும், மறுவுலகிலும் நன்மை பயக்கும். இறைவன் ஒருவனே. அவனுக்குமனைவியோ, மகனோ எவருமில்லை. அவன் தேவையற்றவன். வானங்களிலும்பூமியிலும் அவை இரண்டிற்கும் இடையிலுள்ளவை அவனுக்கே உரியன. வானங்கள்பூமி ஆகியவற்றில் உள்ளவற்றைக் கவனிப்பதற்கும், நிர்வகிப்பதற்கும் அல்லாஹ்வேபோதுமானவனாவான்” என்று கூறுவீராக.